அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமானக் கடத்தல்?

Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்சலஸ்:

அமெரிக்காவில் லாஸ்ஏஞ்சலஸிலிருந்து சிகாகோவுக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் விமானம்கடத்தப்பட்டதாகத் தகவல் பரவியதையடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த செப்டம்பர் 11ம் தேதி 4 விமானங்களைக் கடத்தி தீவிரவாதிகள் நடத்திய கோரத்தாக்குதல் உலகையேஉலுக்கியது. இந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் நேற்று(திங்கள்கிழமை) மீண்டும் ஒரு பயணிகள் விமானம்கடத்தப்பட்டதாகத் தகவல் பரவியதால் பொதுமக்கள் பீதியடைந்தனர். இதுகுறித்த விவரம் வருமாறு,

லாஸ் ஏஞ்சலஸிலிருந்து 153 பயணிகளுடன் ஒரு பயணிகள் விமானம் சிகாகோவுக்குச் சென்று கொண்டிருந்ததது.விமானம் கிளம்பிய சில நிமிடங்களில் அதை ஒருவன் கடத்தியிருப்பதாக, அந்த விமானத்தின்விமானிகளிடமிருந்து கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் வந்தது.

இதையடுத்து, இது தீவிரவாதிகளின் செய்கையாக இருக்குமோ என்று அஞ்சிய பாதுகாப்புப் படையினர் இரண்டுஎப்-16 ரக போர்விமானங்கள் மூலம் கடத்தப்பட்ட விமானத்தைச் சூழ்ந்து சென்றனர்.

கடந்த முறையைப் போல ஏதாவது பெரிய கட்டிடத்தின் மீது மோதச் சென்றால், அந்தப் பெரிய ஆபத்தைத் தவிர்க்கஅந்த விமானத்தை நடுவானில் சுட்டுவீழ்த்தும் நோக்கில் அந்தப் போர்விமானங்கள் சென்றுகொண்டிருந்தன.

இதற்கிடையில் விமானத்தின் காக்பிட் அறைக்குள் கடத்தல்காரன் நுழைந்துகொண்டு விமானிகளிடம் கைகலப்பில்ஈடுபட்டிருக்கிறான். பிறகு ஒரு வழியாக அந்த விமானம் பத்திரமாக சிகாகோவில் தரையிறக்கப்பட்டது.

உடனே பாதுகாப்பு படையினர் விமானத்துக்குள் புகுந்து அந்த கடத்தல்காரனைப் பிடித்து விசாரித்ததில் அவன்தீவிரவாதி இல்லை என்றும், அவனுக்கு மனநிலை சரியில்லை என்றும் அறிந்துகொண்டனர்.

அதன் பிறகே பீதியடைந்த பொதுமக்களும், பயணிகளும் ஒருவழியாக அமைதியடைந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+