வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை கைதி திடீர் சாவு
Subscribe to Oneindia Tamil
வேலூர்:
வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனை கைதி ஒருவர் திடீரென்று இறந்து போனார்.
வேலூர் மாவட்டம் வாலாஜா அணைக்கட்டு ரோடு மேட்டுத் தெருவைச் சேர்ந்த ராமலிங்கம் (47), ஒரு கொலைவழக்கு தொடர்பாக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார்.
இதனால் அவர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், ராமலிங்கத்துக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனே அவருக்கு முதலுதவி சிகிச்சைஅளிக்கப்பட்டது.
பின்னர் வேலூர் அரசு மருத்துவமனைக்கு ராமலிங்கம் கொண்டு செல்லப்பட்டார். அவருக்குத் தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்ட போதிலும், அவர் பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து, பாகாயம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சப்-கலெக்டர்விசாரணையும் நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications