நாவரசு கொலை வழக்கு - விடுதலையானார் ஜான் டேவிட்

Subscribe to Oneindia Tamil

கடலூர்:

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பு படித்துவந்த நாவரசு என்ற மாணவன்கொடூரமான முறையில் கொலைசெய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையிலிருந்த ஜான் டேவிட் நேற்றுவிடுதலை செய்யப்பட்டார்.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பொன்னுசாமியின் மகன் நாவரசு. இவர் சிதம்பரம்அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மருத்துவப்படிப்புப் படித்துவந்தார்.

இதே கல்லூரியில் சீனியராக படித்துவந்த ஜான்டேவிட் என்பவர் நாவரசுவைக் கொடூரமான முறையில்கொலைசெய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சிங்காரவேலன் ஜான் டேவிட்டுக்குஇரட்டை ஆயுள் தண்டனை கொடுத்துத் தீர்ப்பளித்தார்.

இதையடுத்து கடந்த 1996ம் ஆண்டு முதல் ஜான் டேவிட் கடலூர் மத்தியச் சிறையில் இருந்துவந்தார். தான்குற்றமற்றவர் என்றும் தனக்கு அளிக்கப்பட்டுள்ள தண்டனையை ரத்துசெய்யவேண்டும் என்றும் கோரி சென்னைஉயர் நீதிமன்றத்தில் இவர் அப்பீல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசவாரித்த உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச், ஜான் டேவிட் மீது சாட்டப்பட்டக் குற்றச்சாட்டுகளுக்குஅரசு தரப்பில் முறையான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என்று கூறி அவரை விடுதலை செய்யஉத்தரவிட்டது.

இதையடுத்து அவர் நேற்று (திங்கள்கிழமை) நண்பகல் 12.00 மணிக்கு, கடலூரி சிறையிலிருந்து விடுதலைசெய்யப்பட்டார்.

கையில் பைபிளுடனும், முகத்தில் தாடி, மீசை, மூக்குக்கண்ணாடியுடனும் தளர்ந்த நடையோடு வெளியில் வந்தார்ஜான்டேவிட். அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில்,

பீரங்கிமுனையைவிட பேனா முனை வலுவானது. எனவே எதையாவது எழுதி என் வாழ்க்கையைவீணாக்கிவிடாதீர்கள்.

தயவு செய்து என்னை வாழவிடுங்கள். நான் குற்றமற்றவன் என்பதை அறிந்து கர்த்தர் என்னைக்காப்பாற்றியுள்ளார்.

மீண்டும் நான் கல்லூரியில் சேர்ந்து என் மருத்துவப் படிப்பைத் தொடர்வேன் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+