நான் நிரபராதி .. கண்ணப்பன் வாக்குமூலம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நிலக்கரி இறக்குமதி ஊழல் வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் கண்ணப்பன் தனிக் கோர்ட்டில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட 10 பேர் நிலக்கரி இறக்குமதி ஊழல் வழக்கு தொடரப்பட்டு தனிக்கோர்ட்டில் விசாரணை நடந்துவருகிறது.
இந்த விசாரணையின் ஒரு கட்டமாக செவ்வாய்க்கிழமை முன்னாள் அமைச்சர் கண்ணப்பன் நீதிமன்றத்தில் ஆஜராகி நீதிபதி அன்பழகன் முன்வாக்குமூலம் அளித்தார்.
தனது வாக்குமூலத்தில், நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்ட காலகட்டத்தில் மின்சார பற்றாக்குறை நிலவியது. இதைத் தொடர்ந்தே நிலக்கரிஇறக்குமதி செய்யப்பட்டது. இதில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. நான் நிரபராதி என்றார் அவர்.












Click it and Unblock the Notifications