காஷ்மீரில் அமெரிக்காவுக்கு எதிராகப் போராட்டம்
ஸ்ரீநகர்:
ஆப்கான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவதை எதிர்த்து காஷ்மீரில் இளைஞர்கள் போராட்டம் நடத்தினர்.
மேலும் தலிபான்களுக்கு ஆதரவாகவும் அவர்கள் கோஷம் எழுப்பினார்கள்.
இதையடுத்து போலீசார் அவர்களைக் கலைந்து போக வைத்தனர். ஆர்பாட்டம் அமைதியாகவே நடந்தது.அசம்பாவிதம் ஏதும் நடக்கவில்லை.
இந்தப் போராட்டத்தையடுத்து லால்சவுக்கில் உள்ள கடைகள் பெரும்பாலும் கலவரம் ஏற்படும் என்ற அச்சத்தினால்அடைக்கப்பட்டன.
இதற்கிடையில் வடக்கு காஷ்மீரில் உள்ள பாராமுல்லா, தெற்கு காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் உள்ளசோபியன் ஆகிய பகுதிகளில் அமெரிக்கத் தாக்குதலை எதிர்த்துப் பெருமளவு கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
இங்கு பல ஆர்பாட்டங்களும் நடந்தன.சில இடங்களில் கல்வீச்சு சம்பவங்களும் நடந்தன. ஆனால் பெரியஅசம்பாவிதம் எதுவும் நடைபெறவில்லை.
6 பேர் சாவு:
இந்நிலையில் நேற்று இரவில் ராணுவம் நடத்திய வேட்டையில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 2 தீவிரவாதிகள்காஷியாபாத்தில் பாதுகாப்புப் படையினரால் கொல்லடப்பட்டனர்.
மேலும் லஷ்கர்-ஏ-தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த ஒருவரும், பாகிஸ்தான் குடிமகன் ஒருவரையும் பாதுகாப்புப்படையினர் சுட்டுக் கென்றனர்.
இதற்கிடையில் பாராமுல்லாவில் சிறப்பு போலீஸ் படையைச் சேர்ந்த அதிகாரி ஒருவரை தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றுள்ளனர்.
மேலும் ஒரு அடையாளம் தெரியாத நபர் அதே பகுதியில் இறந்து கிடந்தார்.
இதற்கிடையில் பாரமுல்லா பகுதியில் பாதுகாப்புப் படையினர் சென்ற வழியில் ஒரு கண்ணிவெடி வெடித்தது.ஆனால் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.












Click it and Unblock the Notifications