கத்திரிக்கோலால் குத்தி மனைவியைக் கொன்ற டெய்லர்
சென்னை:
சென்னை அருகே ஆவடியில் தனது மனைவியை கத்திரிக்கோலால் குத்திக் கொலை செய்தார் டெய்லர் ஒருவர்.
ஆவடியிலுள்ள நந்தவனமேடு பகுதியைச் சேர்ந்தவர் சிவராம். இவரது மனைவி வேதா. இவர்களுக்கு சீனிவாசன் எனற மகனும், தனலட்சுமிஎன்ற மகளும் உள்ளனர். சிவராம், ஆவடி ராணுவத் தொழிற்சாலையில், டெய்லராக பணியாற்றி வருகிறார்.
சமீபத்தில் சிவராம், பாண்டிச்சேரிக்கு சென்றார். திரும்பி வந்தவுடன் ஊருக்கு சென்று வந்ததற்கான செலவுக் கணக்கை மனைவி வேதாகேட்டுள்ளார். அதற்கு தான் கொண்டு போன பணத்தை எல்லாம் செலவழித்து விட்டதாக சிவராம் கூறியுள்ளார். இப்படி செலவழித்துவிட்டீர்களே என்று வேதா கோபப்பட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சிவராம், வீட்டிலிருந்த கத்திரிக்கோலை எடுத்துவேதாவை கண்டபடி குத்தியுள்ளார். இதில் வேதாபடுகாயமடைந்து துடித்தார். உடனடியாக மகன் சீனிவாசன் உள்ளிட்டோர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு வேதாசிகிச்சை பலனின்றி இறந்தார்.
இந்த பரிதாபச் சம்பவம் குறித்து ஆவடி போலீஸில் சீனிவாசன் புகார் கொடுத்தார். அதன் பேரில் சிவராம் கைது செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications