இந்தியாவின் ஆதரவைக் கோரினார் முஷாரப்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்திக் கொண்டிருக்கும் தாக்குதல்களுக்கு ஆதரவளித்துள்ள பாகிஸ்தான்,இந்தியாவின் ஆதரவையும் கோரியுள்ளது.

திங்கள்கிழமை இரவு இந்தியப் பிரதமர் வாஜ்பாயைத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட பாகிஸ்தான் அதிபர்பர்வேஸ் முஷாரப், அமெரிக்காவின் தாக்குதலுக்கு இந்தியா ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

சுமார் 15 நிமிடங்கள் நடந்த இந்தத் தொலைபேசிப் பேச்சின்போது, காஷ்மீர் சட்டசபை தாக்கப்பட்ட சம்பவம்குறித்தும் வாஜ்பாய் எடுத்துக் கூறினார்.

42 பேர் கொல்லப்பட்ட இந்தப் பயங்கர சம்பவத்துக்கு பாகிஸ்தான் தீவிரவாதிகள்தான் காரணம் என்றும் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்குமாறும் வாஜ்பாய் கேட்டுக் கொண்டார்.

இதற்குப் பதிலளித்த முஷாரப், இச்சம்பவத்திற்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவிப்பதாகவும், இது குறித்துஉடனடியாக விசாரிக்க பாகிஸ்தான் அரசு உத்தரவிடும் என்றும் வாக்குறுதி அளித்தார்.

மேலும், காஷ்மீர் பிரச்சனை குறித்து 2 நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை மீண்டும் தொடர வேண்டும்என்றும் முஷாரப் கேட்டுக் கொண்டார்.

வாஜ்பாயுடன் தொலைபேசியில் பேசினார் ரஷ்ய அதிபர் புதின்

ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்காவும் மற்ற ஆதரவு நாடுகளும் தாக்குதல் நடத்துவதற்கு ஆதரவளிக்குமாறு ரஷ்யஅதிபர் புதினும் பிரதமர் வாஜ்பாயைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+