போலீஸ் சங்கம் குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக போலீஸ் சங்கம் குறித்து விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் திடீரென சமீபத்தில் போலீஸ் சங்கம் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழக போலீஸார் சங்கம் அமைத்துக் கொள்ளஅனுமதி அளிக்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி தமிழக ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி சென்னைஉயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சுபாஷன் ரெட்டி, சிவசுப்ரமணியன் ஆகியோர் கொண்டபெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிமன்றம் முன்பு வாதாடிய சுப்ரமணியசுவாமி, "அதிமுக தனது சட்டசபைத் தேர்தல் அறிக்கையின்போது போலீஸார் சங்கம்வைத்துக் கொள்ள அனுமதிப்போம் என்று உறுதி கூறியுள்ளது. அந்த உறுதிமொழியின்படி சங்கம் வைக்க அனுமதிக்க வேண்டும் என்றுஉயர்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்" என்றார்.

இதையடுத்து சங்கம் அமைப்பதால் அரசுக்கு ஏற்படும் சாதக, பாதக அம்சங்கள் குறித்து நவம்பர் 7ம் தேதிக்குள் விளக்கம் அளிக்கவேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+