ராஜஸ்தான் போலீசிடம் சிக்கிய ஒசாமா!
ஜெய்சால்மீர்:
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மீர் நகரில் இன்று சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின்லேடனைப் போல் ஒருவர் காரில்சென்றுகொண்டிருந்ததைப் பார்த்த பொதுமக்கள் பீதியடைந்தனர்.
அதைப் பார்த்த பொதுமக்கள் உடனே அருகில் இருந்த காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து கோட்வாலி காவல் நிலையத்திலிருந்து ஏராளமான போலீசார் வாகனங்களில் விரைந்து சென்று, அந்தநபர் சென்றுகொண்டிருந்த காரை துரத்திப் பிடித்து நிறுத்தினர். உள்ளே பின் லேடனை போலவே ஒருவர்இருக்கவே, அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
பின்லேடன் பிடிபட்டுவிட்டதாக தகவல் பரவியதையடுத்து ஏராளமான பொதுமக்களும் காவல் நிலையம் முன்திரண்டனர்.
அந்த நபரிடம் விசாரணை நடத்தியதில்,
அவர் பின் லேடன் இல்லை என்பதும், இந்தியாவில் உள்ள ஒரு அமெரிக்க நிறுவன ஊழியரின் மகன் என்பதும்தெரியவந்தது. எனவே உடனடியாக அவரை போலீசார் விடுவித்தனர்.












Click it and Unblock the Notifications