முதல்வர பன்னீர் இன்று டெல்லி பயணம்
சென்னை:
காவிரி நதி நீர் ஆணையக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் செவ்வாய்க்கிழமை மாலை டெல்லி செல்கிறார்.
காவிரி நதி நீர் ஆணையக் கூட்டம் டெல்லியில் புதன்கிழமை நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் தமிழக, கர்நாடக, கேரள மற்றும் பாண்டிச்சேரிமாநில முதல்வர்கள் கலந்து கொள்கின்றனர். பிரதமர் வாஜ்பாய் தலைமையில் இக்கூட்டம் நடக்கிறது.
கடந்த மாதமே இந்தக் கூட்டம் நடப்பதாக இருந்தது. ஆனால் கூட்டம் நடைபெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு ஜெயலலிதா பதவிவிலகி விட்டதால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இந் நிலையில் 10ம் தேதி கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இக்கூட்டத்தில் தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் கலந்துகொள்கிறார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழகத்தின் பங்கான 205 டி.எம்.சியை வழங்க வேண்டும் என்றுகூட்டத்தின்போது வற்புறுத்துவேன் என்றார்.












Click it and Unblock the Notifications