தமிழகத்தில் தொடர்கிறது மழை
சென்னை:
சென்னை நகரில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கன மழை செவ்வாய்க்கிழமை ஓய்ந்தது. இருப்பினும் தமிழகத்தின் பல பகுதிகளிலும்தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது.
சென்னை மற்றும் அதன் சுற்றுப் புறங்களில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வந்தது. இதனால் நகரின் இயல்பு வாழ்க்கைசுற்றிலும் பாதிக்கப்பட்டது. பல தாழ்வான இடங்களில் தேங்கிய மழை நீர் இன்னும் வற்றாமல் அப்படியே உள்ளது.
இந் நிலையில், வங்கக் கடலில் ஏற்பட்ட புயல் சின்னம் வலுவிழந்ததால் சென்னை நகரம் புயல் அபாயத்திலிருந்து தப்பியது. இதையடுத்துமழையும் நின்றது. செவ்வாய்க்கிழமை காலை முதல் வழக்கமான கொடும் வெயில் அடித்து வருகிறது.
இருப்பினும் தென் மேற்கு பருவ மழை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்னும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கும் என்று நுங்கம்பாக்கம்வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.
லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம் என்று அது அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications