ராமேஸ்வரம் வந்த 14 இலங்கை அகதிகள்
ராமேஸ்வரம்:
இலங்கையிலிருந்து 14 அகதிகள் படகுகள் மூலம் ராமேஸ்வரம் வந்து சேர்ந்தனர்.
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே சண்டை நடந்து வருவதையடுத்து,இலங்கைத் தமிழர்கள் தமிழகத்திற்கு அகதிகளாக வந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் 5 பெண்கள், 3 குழந்தைகள் உள்பட 14 இலங்கை அகதிகள் படகுகள் மூலம் ராமேஸ்வரத்திற்கு வந்துசேர்ந்தனர்.
7 குடும்பங்களைச் சேர்ந்த இவர்கள் முல்லைத் தீவு, புதுக்குடியிருப்பு மற்றும் வவுனியாவைச் சேர்ந்தவர்கள். படகுக்கட்டணமாக ரூ.50 ஆயிரம் வரை கொடுத்து இவர்கள் இங்கு வந்து சேர்ந்துள்ளனர்.
அவர்கள் உடனடியாக மண்டபம் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
"இலங்கையில் தமிழர்கள் உள்ள பகுதிகளில் யாருக்காவது உடல் நலக்குறைவு ஏற்பட்டால், ஒழுங்கான சிகிச்சைகிடைக்காது. இதனாலேயே பல தமிழர்கள் இறந்து போகின்றனர். நல்ல சிகிச்சை பெறுவதற்காகவே நாங்கள் இங்குவந்துள்ளோம்" என்று கூறினார் மனோரதி (18) என்ற அகதி.












Click it and Unblock the Notifications