தீவிர பிரசாரத்தில் ஸ்டாலின்
சென்னை:
சென்னை மாநகர மேயர் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளரும், தற்போதைய மேயருமான மு.க.ஸ்டாலின்திங்கள்கிழமை சென்னையின் பல்வேறு பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.
காலை 7 மணியளவில் தனது பிரசாரத்தை ஆர்.கே. நகரில் துவக்கினார். பல்வேறு பகுதிகளில் திறந்த ஜீப்பில்சென்றவாறு அவர் ஓட்டுக் கேட்டார். அவருடன் திமுக மற்றும் தோழமைக் கட்சியைச் சேர்ந்த ஏராளமானோர் உடன்சென்றனர்.
ஹரி நாராயணபுரம், அம்பேத்கர் ரோடு, பாரதி நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் ஸ்டாலின் வாக்கு கேட்டார்.தொடர்ந்து பல தெருக்கள், சாலைகளில் ஸ்டாலின் ஓட்டு கேட்டவாறு சென்றார்.
முன்னதாக ஸ்டாலினின் பிரசாரத்தை முன்னாள் அமைச்சர் சற்குண பாண்டியன், எம்.பி குப்புசாமி ஆகியோர் துவக்கிவைத்தனர்.
செவ்வாய்க்கிழமை சைதாப்பேட்டை பகுதியில் ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார். காலை 7 மணிக்குஜாபர்கான்பேட்டை அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து, தனது பிரசாரத்தை துவக்கும் ஸ்டாலின், மாலையில்சர்தார் பட்டேல் சாலையில் பிரசாரத்தை முடித்துக் கொள்கிறார்.
இந்த பிரசாரத்தின்போது சைதை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. சைதை கிட்டுவும் உடன் செல்கிறார்.பிரசாரத்திற்கான ஏற்பாடுகளை சைதை பகுதி திமுக செயலாளர் ஆர்.எஸ். ஸ்ரீதர் ஏற்பாடு செய்துள்ளார்.
புதன்கிழமை சேப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட வார்டுகளில் பிரசாரம் செய்து வாக்கு சேகரிக்கிறார் ஸ்டாலின்.