பாகிஸ்தானில் 3 தலிபான் ஆதரவு தலைவர்கள் கைது
இஸ்லாமாபாத்:
அமெரிக்க நெருக்குதலையடுத்து தலிபான் ஆதரவு தலைவர்களை பாகிஸ்தான் அரசு கைது செய்ய ஆரம்பித்துள்ளது.
அமெரிக்கத் தாக்குதலை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடத்த இவர் அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், எந்தப் போராட்டத்தையும்இவர் தலைமை தாங்கி நடத்தவிடாமல் தடுக்கும் வகையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் தொடர்ந்து அதிபர் பர்வேஸ் முஷாரபை விமர்சித்து வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதே அமைப்பைச் சேர்ந்த இன்னொரு பிரிவின் தலைவரான சமீயுல் ஹக் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.இவர் அகோரா கட்டக் பகுதியில் உள்ள தனது வீட்டிலேயே அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.
இவர் இந்தப் பகுதியில் மதப் பள்ளி நடத்தி வருகிறார். இந்தப் பள்ளியில் 1990ம் ஆண்டில் பயின்றவர் தான் தலிபான் தலைவர் முல்லாமுகம்மத் ஒமர் என்பது குறிப்பிடத்தக்கது. தலிபான்களை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்தவர் சமீயுல் ஹக்.
ஆப்கானிஸ்தான் டிபன்ஸ் கவுன்சில் என்ற அமைப்பையும் இவர் நடத்தி வருகிறார். தலிபான்களுக்கு எதிரான அமெரிக்கத் தடையைஎதிர்த்து போராடி வந்தவர் சமீயுல் ஹக். இவர் வீட்டை விட்டு வெளியே எட்டிப் பார்க்கக் கூட அனுமதிக்கக் கூடாது என பாகிஸ்தானிடம்அமெரிக்கா திட்டவட்டமாகக் கூறிவிட்டது.
இவரது தகவல் தொடர்புகள் அனைத்துமே துண்டிக்கப்பட்டு வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.
அதே போல இஸ்லாமிய மதத்தின் சன்னி பிரிவைச் சேர்ந்த முக்கிய தீவிரவாதியான ஆஸம் தாரிக் என்பவரும் லாகூர் விமான நிலையத்தில்வைத்து நேற்றிரவு கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இவர் சிப்பாய்-ஏ-சகாபா பாகிஸ்தான் என்ற சன்னி பிரிவு தீவிரவாத அமைப்பை தலைமை தாங்கி நடத்தி வருகிறார். இந்த அமைப்பினர்ஷியா பிரிவு முஸ்லீம்களை கொன்று குவித்து வருகிறது. இந்தத் தீவிரவாதிகளுக்கு தலிபான் தீவிர ஆதரவு அளித்து வருகிறது.