டான்சி வழக்கு: "பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் சாட்சியம் தவறு"
சென்னை:
டான்சி வழக்கில் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி லத்திகா படால்கரின் சாட்சியம் தவறானது என்று முன்னாள் அமைச்சர்முகமது ஆசிப்பின் வழக்கறிஞர் வாதாடினார்.
டான்சி வழக்கில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி தினகர் முன்னிலையில் நடந்து வருகிறது.
ஜெயலலிதா மற்றும் சசிகலா தரப்பு வாதங்கள் அனைத்தும் கடந்த வாரமே முடிந்துவிட்ட நிலையில், முன்னாள்அமைச்சர் ஆசிப் தரப்பு வாதங்கள் நேற்று (திங்கள்கிழமை) துவங்கின.
ஆசிப்பின் வழக்கறிஞர் அசோகன் தன்னுடைய வாதத்தின்போது கூறியதாவது:
டான்சி வழக்கில், பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி லத்திகா படால்கர் தனி நீதிமன்றத்தில் கூறிய சாட்சியம் ஏற்கக் கூடியதுஅல்ல.
1992ல் டான்சி நிலத்தின் ஒரு பகுதி ஜெயா பப்ளிகேஷனுக்கு விற்பதற்காக தயாரிக்கப்பட்ட ஒரு பைலை, முதல்வர்உள்பட பலருக்கும் அனுப்பி வைத்துள்ளோம் என்று குறிப்பு எழுதி வைத்துள்ளதாக லத்திகா சாட்சியம்அளித்துள்ளார்.
இவ்வாறு குறிப்பு எழுதியதற்காக பின்னர் ஆசிப் தன்னைத் திட்டினார் என்றும், இந்தக் குறிப்புகள் அடித்துவைக்கப்பட்டுள்ளன என்றும் சாட்சியம் அளித்துள்ளார் லத்திகா.
இந்தச் சாட்சியம் அனைத்துமே தவறானதாகும். போலீசாரின் தூண்டுதல்கள் காரணமாகவே அந்த பைலில் பலதிருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன என்று வாதம் செய்தார் வழக்கறிஞர் அசோகன்.
வழக்கறிஞர் அசோகனின் வாதம் இன்று தொடர்ந்து நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications