கள்ளுக்கடைகளை திறக்க கு.ப.கி. கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்தி மதுக் கடைகளை அடைக்க வேண்டும். அதற்குப் பதிலாக கள்ளுக் கடைகளைத் திறக்கவேண்டும் என்று தமிழர் பூமி கட்சியின் தலைவரும் மாஜி மந்திரியுமான கு.ப.கிருஷ்ணன் கூறியுள்ளார்.

கடந்த ஜெயலலிதா ஆட்சியில் விவசாயத்துறை அமைச்சராக இருந்தவர் கு.ப.கிருஷ்ணன்.

சென்னை விஷச்சாராய சம்பவம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விஷச்சாராய சாவுகளைத் தடுப்பதற்கு ஒரே வழிதமிழகத்தில் பூரண மது விலக்கை அமல் செய்வதுதான்.

சென்னை கோட்டூர் காலனி பகுதியில் நடந்த விஷச்சாராய சம்பவம் மனதை நெகிழ வைப்பதாக உள்ளது. ஆனால் இது அவ்வப்போதுநடந்து வருவது வேதனை தருகிறது. இதுபோன்ற துயரச் சம்பங்கள் நடக்கும் போதெல்லாம், காவல்துறையினரை இடமாற்றம் செய்வதும்,இழப்பீடு தருவதும் மட்டுமே தவறாமல் நடந்து வருகிறது. பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படுவதில்லை.

மதுக்கடைகளைத் திறந்து விட்டு மறுபுறம் கள்ளுக் கடைகளை அரசு மூடியுள்ளது. இது இரட்டை வேடமாகும். மதுவிலக்கு என்றால்எதுவுமே இருக்கக் கூடாது.கள்ளுக் கடைகள் நடத்துவது பாவம் என்றால் பிறகு மதுக் கடைகளை மட்டும் நடத்துவதில் நியாயம் உள்ளதா?

எனவே உடனடியாக கள்ளுக் கடைகளைத் திறந்து ஏழை மக்களின் உயிர்களை அரசு காக்க வேண்டும், இல்லாவிட்டால் மதுக் கடைகள்அனைத்தையும் உடனே மூடி விட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+