தமாகா-காங்கிரஸ் இணைப்பு இல்லை: வாசன்
கோயம்புத்தூர்:
தமிழ் மாநில காங்கிரசை காங்கிரஸ் கட்சியுடன் இணைக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கோயம்புத்தூரில் நிருபர்களிடம் இன்று (செவ்வாய்க்கிழமை) கூறியதாவது:
தமாகாவைப் பலப்படுத்துவதற்காக, நான் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யப் போகிறேன். மாவட்டவாரியாக கட்சியின் நிலையை நன்கு ஆராய்ந்து, முடிந்தால் மாவட்ட நிர்வாகிகளையும் மாற்றி கட்சியைப்பலப்படுத்துவேன். கட்சியின் தனித் தன்மையை நிலைநாட்டுவேன்.
உள்ளாட்சித் தேர்தல் முடிந்த பிறகு நாங்கள் 3வது அணியுடன் சேரப் போவதாக சிலர் கூறிக் கொண்டுள்ளனர்.ஆனால் அதைப் பற்றிய பேச்சுக்கே இப்போது இடமில்லை. அதே போல், காங்கிரஸ் அறக்கட்டளை எங்களதுசொந்தப் பிரச்சினை. அதுகுறித்தும் இங்கே நான் எதுவும் பேச விரும்பவில்லை.
உள்ளாட்சித் தேர்தலில் தமாகாவுக்கு குறைவாகத்தான் சீட்டுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன என்று சொல்லமுடியாது. ஆனால், தற்போது கிடைத்திருப்பதை விட அதிகமான சீட்டுகள் கிடைக்க வேண்டும் யார்தான்ஆசைப்பட மாட்டார்கள்.
உள்ளாட்சித் தேர்தலில், தமாகாவுக்குள்ளேயே சில அதிருப்தியாளர்கள் எங்களுக்கு எதிராக வேட்புமனு தாக்கல்செய்தனர் என்பது உண்மைதான். ஆனால், அவர்கள் தற்போது மனுக்களை வாபஸ் பெற்றுக் கொண்டனர். எல்லாம்சுமூகமாக முடிவடைந்து விட்டது.
கடந்த 5 மாதங்களாக தமிழகத்தை ஆளும் அதிமுக, திருப்திகரமாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. குறுகியகால கட்டத்திலேயே ஏராளமான நலத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டுள்ளன. காவிரிப்பிரச்சினையில் தமிழக அரசின் நிலைக்கு தமாகாவின் ஆதரவு எப்போதும் உண்டு.
ஆனாலும், சட்டசபையில் பொறுப்புள்ள ஒரு எதிர்க்கட்சியாகவே தமாகா செயல்படும். அதிமுக ஆட்சி தவறுசெய்ய நேர்ந்தால், அதைத் தட்டிக் கேட்பதற்கு தமாகா தயங்காது என்றார் வாசன்.












Click it and Unblock the Notifications