பாகிஸ்தானில் வன்முறை தொடர்கிறது
இஸ்லாமாபாத்:
ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கத் தாக்குதலை எதிர்த்து பாகிஸ்தானின் பல பகுதிகளிலும் நேற்று இரவு முழுவதும் கலவரம் நடந்தது.பகலில் நடந்த கலவரங்கள் இரவிலும் தொடர்ந்தன.
குவேட்டா நகரில் யூனிசெப் அமைப்புத்து சொந்தமான அலுவலகத்தை வன்முறையாளர்கள் தீ வைத்து எரித்தனர்.
தலிபான் ஆதரவு அமைப்பான ஜமாத்-உலேமா-ஈ-இஸ்லாம் மேலும் போராட்டங்கள் நடத்த அழைப்பு விடுத்துள்ளது. இதனால் இன்றும்பெரும் அளவிலான வன்முறை வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் முக்கிய நகர்களில் ராணுவம் பாதுகாப்பில்ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க, ஐரோப்பிய பத்திரிக்கையாளர்கள் தங்கியுள்ள ஹோட்டல் செரனாவுக்கும் வன்முறையாளர்கள் தீ வைக்க முயன்றனர்.இதையடுத்து இந்த ஹோட்டலை சுற்றி கம்பி வலைகள் அமைக்கப்பட்டன. ஹோட்டலில் இருந்து வெளியே வர வேண்டாம் எனபத்திரிக்கையாளர்களை போலீசார் எச்சரித்துள்ளனர்.
நேற்று நடந்த கலவரத்தில் ஒருவர் கொல்லப்பட்டார். 100க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
இது தவிர ராவல்பிண்டி, கராச்சி, இஸ்லாமாபாத் ஆகிய நகர்களிலும் இரவு முழுக்க வன்முறை நடந்தது.