திண்டுக்கல்லில் 50 சாராய வியாபாரிகள் அதிரடி கைது

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்:

திண்டுகல்லில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், 5 பெண்கள் உள்பட 50 சாராய வியாபாரிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம் சென்னை கோட்டூர் அருகே விஷச்சாராயம் குடித்து 36 பேர் இறந்து போன சம்பவம் தமிழகத்தையேஉலுக்கியது. இதையடுத்து தமிழகத்தின் பல பகுதிகளிலும் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திண்டுகல்லில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் சாராய வியாபாரிகள் 50 பேரை கைதுசெய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் சென்ற 2 நாட்களாக போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனைதிண்டுக்கல் மதுவிலக்கு பிரிவு கூடுதல் போலீஸ் கண்காணிப்பாளர் ஜவகர்லால் தலைமையில் நடைபெற்றது.

இவரது தலைமையிலான போலீஸ் படையினர் திண்டுக்கல்லின் வெள்ளோடு, அய்யம்பாளையம், கல்வாரிபட்டி,மத்தையூர், வேடப்பட்டி, ஆவாரம்பட்டி, முருகாத்தூரான்பட்டி, தங்கச்சியம்மாபட்டி, தாடிக்கொம்பு, வேடசந்தூர்,ஆத்துமேடு ஆகிய பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் போது 5 பெண் சாராய வியாபாரிகள் உள்ளிட்ட 50 பேரை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக 76 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சோதனையின் போது பிடிபட்ட ரூ.65 ஆயிரம் மதிப்புள்ள 650 லிட்டர் சாராயம், ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள 6ஆயிரத்து 200 லிட்டர் சாராய ஊறலையும் போலீசார் அழித்தனர். சாராய வியாபாரத்திற்காக பயன்படுத்தப்பட்டுவந்த 2 மொபெட்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த சோதனை குறித்து மதுவிலக்கு கூடுதல் போலீஸ் கண்காணிப்பாளார் ஜவகர்லால் கூறுகையில், "தற்போதுநடைபெற்றது வழக்கமான சோதனைதான். ஆனாலும் தற்போது மதுவிலக்கு போவீசாரும், மற்ற போலீசாரும்அதிக கவனத்துடன் சோதனை நடத்தி வருகிறோம். இனி வாரம்தோறும் 2 நாட்கள் சாராய வேட்டை நடத்தமுடிவெடுக்கப்பட்டுள்ளது" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+