ஜெ. புலம்பலை மக்கள் நிராகரிப்பார்கள்: பா.ஜ.க.
சென்னை:
பதவியைப் பறித்து விட்டார்கள் என்ற ஜெயலலிதாவின் புலம்பலை உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள், புறக்கணித்து விடுவார்கள் என்று பாரதீய ஜனதாக் கட்சி பொதுச் செயலாளர் இல.கணேசன்கூறியுள்ளார்.
செங்கல்பட்டில் பாரதீய ஜனதாக் கட்சி மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இல.கணேசன்பிரசாரம் மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், மின்னணு வாக்குப் பதிவுஇயந்திரத்தால் கள்ள ஓட்டுப் போட முடியாது.
அதிமுகவினர் இந்தத் தேர்தலில் பெருவாரியாக கள்ள ஓட்டுப் போட முடிவு செய்துள்ளனர். இதற்காகத்தான்மின்னணு வாக்குப் பதிவு வேண்டாம் என்று அவர்கள் ஒற்றைக் காலில் நின்று சாதித்து வருகின்றனர்.
எனவே திமுகவினரும், கூட்டணிக் கட்சியினரும் அதிமுகவின் இந்த சதித் திட்டத்தை தடுத்து நமது வெற்றியைஉறுதி செய்ய வேண்டும்.
சென்னையில் அதிமுகவினரின் பிரசாரம் மிகவும் மந்தமாக உள்ளது. காரணம் மக்களைப் போய் நேரில் சந்தித்துஓட்டுக் கேட்பதை விட வாக்குச்சாவடிகளுக்கு வரும் வாக்காளர்களைச் சந்திக்க அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
வாக்குச்சாவடிகளில் வன்றையை ஏற்படுத்தி வாக்களிக்க வருகிற பெண்கள் மற்றும் மற்றவர்களை மிரட்டிவாக்களிக்க விடாமல் செய்ய அவர்கள் திட்டமிட்டு வருகின்றனர். அதற்கு போலீஸும் துணை போகும்வாய்ப்புள்ளது.
இந்த சதித் திட்டம் குறித்து திமுக சார்பில் மத்திய உள்துறை அமைச்சர் அத்வானிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.அதேபோல, பாரதீய ஜனதாக் கட்சியும் அத்வானிக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
தனது பதவியைப் பறித்து விட்டதாக ஜெயலலிதா புலம்பி வருகிறார். அவரது இந்தப் புலம்பலை மக்கள் இந்தத்தேர்தலில் நிராகரித்து விட்டார்கள் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications