இந்தோனேசியாவில் 1,000 மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

Subscribe to Oneindia Tamil

ஜகார்தா:

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்திக் கொண்டிருக்கும் தாக்குதலைக் எதிர்த்து, இந்தோனேசியாவில்மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, அவர்கள் அமெரிக்காவிற்குஎதிரான கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலம் சென்றனர்.

இந்த ஊர்வலம் இந்தோனேசியா பாராளுமன்றக் கட்டடத்தைத் தாண்டிச் சென்றபோது, வன்முறை வெடித்தது.கோஷம் போட்டுக் கொண்டிருந்த மாணவர்கள் அனைவரும் கூடி, பாராளுமன்றக் கட்டடத்தை உடைக்கமுயன்றனர்.

இதனால், மாணவர்களைக் கலைந்து போகச் செய்வதற்காக போலீசார் தடியடி நடத்த ஆரம்பித்தனர். நிலைமைகட்டுக்கடங்காமல் போகவே, கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி மாணவர்களைக் கலைந்து ஓடச் செய்தனர்போலீசார்.

இந்த வன்முறை காரணமாக, நூற்றுக்கணக்கான மாணவர்களைப் போலீசார் கைது செய்திருப்பதாகக்கூறப்படுகிறது.

உலகிலேயே முஸ்லிம்கள் அதிகமான நாடு இந்தோனேசியா என்பது குறிப்பிடத்தக்கது. ஆப்கானிஸ்தானில்அமெரிக்கா துவங்கியிருக்கும் தாக்குதலுக்குப் பிறகு, இன்றுதான் இந்தோனேசியாவில் அமெரிக்காவிற்கு எதிரானஆர்ப்பாட்டம் ஆரம்பித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+