For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெரம்பலூர் கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை

By Staff
Google Oneindia Tamil News

பெரம்பலூர்:

பெரம்பலூரிலுள்ள தனியார் கல்லூரியில் மாணவி ஒருவர் கல்லூரி விடுதியில் தூக்கு போட்டு தறகொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் பெரம்பலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூரிலுள்ள தனியார் கல்லூரி ஒன்றில் முதுகலை உயிரியில் படிப்பு படித்தவந்தார் ஆந்திராவைச் சேர்ந்தபத்மஜா என்பவர். இவர் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தார்.

இந்நிலையில் இன்று (புதன்கிழமை) காலை அவர் கல்லூரிக்கு செல்லவில்லை. விடுதியிலேயே தங்கிவிட்டார். சகமாணவிகள் அவர் ஏன் வரவில்லை என்று சந்தேகப்பட்டனர் அவருக்கு உடல் நல குறைவு ஏற்பட்டிருக்கக்கூடும்என்று நினைத்து, அவர் வராததை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

இந்நிலையில் பத்மஜா விடுதியிலுள்ள தனது அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து இறந்து போனது தெரியவந்தது. இதையடுத்து, கல்லூரி முழுவதும் பெரும் பரபரப்பு நிலவியது.

உடனே இந்த தகவல் போலீசுக்கு தெரியபடுத்தப்பட்டது. போலீசார் பத்மஜாவின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.பத்மஜா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன என்பதுதெரியவரவில்லை. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்லூரியில் மாணவி தற்கொலை செய்ததால், பெரம்பலூர் முழுவதும் இன்று பெரும் பரபரப்பு காணப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X