For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதிமுக தலைமை நிலைய நிர்வாகி நீக்கம்: ஜெ. அதிரடி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

அதிமுக தலைமை நிலைய நிர்வாகி புலவர் சங்கரலிங்கம் நீக்கப்பட்டு, அந்த இடத்திற்கு முன்னாள் நிர்வாகியானமகாலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதிமுக தலைமை நிலையத்தில் நிர்வாகியாக பதவிவகித்துவந்தவர் புலவர் சங்கரலிங்கம் என்பவராவார். இவர்அதிமுகவின் கட்சி நாளேடான நமது எம்.ஜி.ஆர். பத்திரிக்கையின் ஆசிரியராகவும் இருக்கிறார்.

இவர் கட்சியில் அமைச்சர் முதல் சாதாரணத் தொண்டர்கள் வரை பலரையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.ஜெயலலிதாவிடம் இவர் கடைபிடித்து வந்த நன்னடத்தை காரணமாக அவரிடம் சங்கரலிங்கத்திற்கு செல்வாக்குஇருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இவர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி பல முறைகேடுகளில் ஈடுபட்டதாக வந்த புகார்களைஅடுத்து இவரை நீக்கவேண்டும் என்று கட்சியின் பலமட்டங்களில் இருந்தும் ஜெயலலிதாவுக்கு கோரிக்கைவிடப்பட்டது.

இதைத்தொடர்ந்து தற்போது இவரை இந்தப் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, முன்னாள் நிர்வாகி மகாலிங்கத்தைஇந்தப்பதவியில் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அமர்த்தியுள்ளார். ஆனால் சங்கரலிங்கம் நமதுஎம்.ஜி.ஆர். இதழின் ஆசிரியராக தொடர்ந்து நீடிக்கிறார்.

மகாலிங்கம் எம்.ஜி.ஆர். காலத்திலிந்து கடந்த 1996ம் ஆண்டு வரை இந்தப் பதவியில் இருந்துள்ளார் என்பதுகுறிப்பிடத்தக்கது. 1996ம் ஆண்டு இவர் மீத கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை அடுத்து இவர் அப்பதவியில் இருந்துநீக்கப்பட்டு, வேறுபதவி எதுவும் வழங்கப்படாமல் இருந்தார்.

தற்போது மீண்டும் இவரும், மனோகரன் என்பவரும் கட்சியின் தலைமை நிலைய நிர்வாகிகளாகநியமிக்கப்ட்டுள்ளதாக ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X