அமெரிக்க தாக்குதலில் இதுவரை 76 பேர் பலி
காபூல்:
ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்க தாக்குதலில் இதுவரை 76 பேர் பலியாகியுள்ளனர்.
ஆனால், தற்போது நடந்து வரும் அமெரிக்காவின் விமானத் தாக்குதல்களால் ஆப்கானிஸ்தான் நகர மக்கள்மிகவும் கலவரத்துக்குள்ளாகியுள்ளனர். கடந்த 4 நாள் தாக்குதலில் இதுவரை 76 மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.நூற்றுக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று (புதன்கிழமை) மாலையிலிருந்து அமெரிக்கா தன்னுடைய தாக்குதலைத்தீவிரப்படுத்தியுள்ளது. காபூல் மற்றும் காண்டஹார் மீது பயங்கரமான குண்டுத் தாக்குதல் நடத்தி வருகின்றனஅமெரிக்க விமானங்கள்.
எந்த நேரம் தாக்குதல் நடக்குமோ என்ற அச்சத்தில் 4 நாட்களாகத் தூக்கத்தைத் தொலைத்துள்ளனர்ஆப்கானிஸ்தான் மக்கள். முக்கிய நகரங்களை விட்டு ஆயிரக்கணக்கானவர்கள் வெளியேறிக் கொண்டேஇருக்கின்றனர்.
ஒரு பக்கம் அமெரிக்க போர் விமானங்கள் குண்டு வீசித் தாக்கிக் கொண்டிருந்த போதிலும், மறு பக்கம் வேறு சிலஅமெரிக்க போர் விமானங்கள் உணவுப் பொருட்களையும் மருந்துகளையும் ஆப்கானிஸ்தான் மக்களுக்குப்போட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.












Click it and Unblock the Notifications