காங்கிரஸ் அறக்கட்டளை விவகாரம்: உயர் நீதிமன்றத்தில் புதிய வழக்கு
சென்னை:
தமிழக காங்கிரஸ்அறக்கட்டளைக்கு அறங்காவலர்களை நியமிப்பது தொடர்பாக திட்டம் ஒன்றை வகுத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றதித்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழக காங்கிரஸ் அறக்கட்டளைக்கு அறங்காவலர்களை அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்திநியமித்திருந்தார்.
காங்கிரஸ் அறக்கட்டளைக்கு அறங்காவலர்களை நியமிப்பது தொடர்பாக உயர் நீதிமன்றம் திட்டம் வகுத்து தரவேண்டும் என்று தமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி சென்னை உயர் நீதி மன்றத்தில் மனுஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில் இதே போன்ற மனு ஒன்றை தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னுசாமியும்,சேலத்தைச் சேர்ந்த கோபலனும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். அவர்கள் தங்கள் மனுவில்கூறியிருப்பதாவது:
தமிழக காங்கிரஸ் அறக்கட்டளைக்கு அறங்காவலர்களை நியமிக்க சோனியா காந்திக்கு எந்த விதமான அதிகாரமும்கிடையாது.
இதுவரை அறங்காவலராக இருந்து வந்த ராமசாமி உடையார் பல நம்பிக்கை மோசடிகளில் ஈடுபட்டுள்ளார்.எனவே. அவரை அறங்காவலர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்.
காங்கிரஸ் அறக்கட்டளைக்கு அறங்காவலரை நியமிப்பது தொடர்பாக உயர் நீதிமன்றம் திட்டம் ஒன்றை வகுத்துஉத்தரவிட வேண்டும் என்று அம்மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications