போலி கிரெடிட் கார்டுகள் - சென்னையில் 3 இலங்கை வாலிபர்கள் கைது
சென்னை:
போலி கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி ஏமாற்றி பொருள்களை வாங்கி வந்த இலங்கையைச் சேர்ந்த 3 பேரைபோலீசார் கைது செய்தனர்.
சென்னையில் இந்தியா மற்றும் வெளிநாட்டு வங்கிகளில் வழங்கியதைப் போல போலியான கிரெடிட் கார்டுகளைப்பயன்படுத்தி கடைகளில் சிலர் ஏமாற்றிப் பொருள் வாங்கி வருவதாக போலீசாருக்குத் தகவல் வந்தது.
இதையடுத்து திருவான்மியூர் இன்ஸ்பெக்டர் கருணாநிதி தலைமையில் தனிப் போலீஸ் படை அமைக்கப்பட்டது.இந்நிலையில் திருவான்மியூர், திருவள்ளுவர் நகர் பகுதியில் சந்தேகத்தின் பேரில் ஜெகன்மோகன், சுதர்சன் மற்றும்பாலசுப்ரமணி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் இவர்களை விசாரித்ததில், அவர்கள் இதுபோன்ற போலி கிரெடிட் கார்டுகளை வைத்துக்கொண்டு மோசடிசெய்து வருவது தெரிய வந்தது.
மேலும் அவர்களிடமிருந்து சில வெளிநாட்டு மற்றும இந்திய வங்கிகள் அளித்தது போன்ற கிரெடிட் கார்டுகள், 3செல் போன்கள், போலி பாஸ்போர்ட் நகல்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
இதே கும்பலைச் சேர்ந்த ராகுல், மனோஜ் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். அவர்களைப் போலீசார்தீவிரமாகத் தேடிவருகின்றனர். இந்த 2 பேரும் ஏற்கனவே இதே குற்றத்திற்காக போலீசிடம் சிக்கித் தண்டனையும்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.












Click it and Unblock the Notifications