ஆப்கானிஸ்தானில் மசூதி தகர்ப்பு
காபூல்:
அமெரிக்க விமானங்களின் கடும் தாக்குதலுக்கு உள்ளாகி வரும் ஆப்கானிஸ்தானில் இப்போது ஒரு மசூதியும்தகர்க்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலும் காண்டஹாரும் குண்டு மழையில் நனைந்து கொண்டிருக்கின்றன.தாக்குதலுக்குள்ளான பல கட்டடங்கள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கின்றன.
ஆப்கானிஸ்தானின் கிழக்கு நகரமான ஜலாலாபாத்தில் உள்ள மசூதி நேற்றிரவு நடந்த தாக்குதலில்தரைமட்டமானது. இதனால் ஏராளமான உயிர் மற்றும் பொருள் சேதம் ஏற்பட்டதாக தலிபான் வட்டாரங்கள் கூறின.
ஜலாலாபாத்தில் தொடர்ந்து அமெரிக்க விமானங்கள் தாக்குதல் நடத்தி வருகின்றன என்றும் தலிபான் அரசுகூறியுள்ளது.
இதற்கிடையே, பின் லேடன் பதுங்கியிருப்பதாகக் கருதப்படும் குகை போன்ற "பங்க்கர்" பகுதிகளில் "பங்க்கர்பஸ்டிங் பாம்" எனப்படும் குண்டுகளால் தாக்குதல் தொடுக்க ஆரம்பித்துள்ளன அமெரிக்க விமானங்கள்.
குகைகளுக்கு மேல் உள்ள பாறைகளை முழுவதும் துளைத்துக் கொண்டு போய், பின்னர் வெடிக்கும் தன்மைவாய்ந்தவை இந்த "பங்க்கர் பஸ்டிங்" குண்டுகள். கடந்த செவ்வாய்க்கிழமை முதலாகவே இத்தகைய குண்டுகளைப்அமெரிக்க விமானங்கள் பயன்படுத்திக் கொண்டிருப்பதாக அதிகாரப்பூர்வமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
பின் லேடனை அழிப்பதற்காக இதுபோன்ற குண்டுகள் இன்னும் அதிகமாகப் பயன்படுத்தப்படவுள்ளதாகவும்கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications