For Daily Alerts
Just In
உச்ச நீதிமன்ற வழக்கைத் துரிதப்படுத்துவோம்... பன்னீர்
சென்னை:
காவிரி நீரைத் திறந்து விட கர்நாடகம் மறுத்த விட்டதால், உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே தமிழக அரசுதொடர்ந்துள்ள வழக்கை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்கூறியுள்ளார்.
காவிரி நதி நீர் ஆணையக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக டெல்லி சென்றிருந்த அவர் புதன்கிழமை இரவுசென்னை திரும்பினார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
தமிழத்திற்குரிய காவிரி நீர்ப் பங்கை திறந்திடுமாறு கோருவதற்காக டெல்லி சென்றோம். ஆனால் தண்ணீர் தரஇயலாது என்று கர்நாடகம் கூறி விட்டது.
இதையடுத்து கர்நாடகம் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு ஏற்கனவேமனுத்தாக்கல் செய்திருந்தது. அந்த மனுவை துரிதப்படுத்த தற்போது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்
Comments
Story first published: Thursday, October 11, 2001, 5:30 [IST]