வேலையில்லாத கவலையில் வாலிபர் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் வேலையில்லாத கவலையில் இருந்த வாலிபர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை அமைந்தகரையைச் சேர்ந்தவர் சிவக்குமார். 21 வயதாகும் இவர் பிளஸ்டூ வரை படித்துள்ளார். பலஇடங்களில் வேலைக்கு முயன்றும் ஒரு வேலையும் கிடைக்கவில்லை.
இதனால் மனம் நொந்த நிலையில் இருந்து வந்தார். வீட்டிலும் "வேலை இல்லாமல் இருக்கிறாயே" என்றுகுடும்பத்தினர் திட்டுவது வழக்கமாம்.
இதனால், "மற்றவர்களின் கேலிப் பேச்சுக்களைக் கேட்டுக் கொண்டிருப்பதை விட இறந்து விடலாம்" என்று முடிவுசெய்த சிவக்குமார் வீட்டிலுள்ள மின்விசிறியில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.












Click it and Unblock the Notifications