ஒன்னா இருக்க கத்துக்கணும்... என்கிறார் வாஜ்பாய்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

தமிழக-கர்நாடக அரசுகள் ஒற்றுமையுடன் காவிரி விவசாயிகளின் பிரச்சனையை அணுகினால் தான் சுமுகமானதீர்வு காண முடியும் என்று பிரதமர் வாஜ்பாய் கூறியுள்ளார்.

நேற்று நடந்த காவிரி நதி நீர் ஆணையக் கூட்டம் முடிந்தபின், ஆணைய தலைவரான பிரதமர் வாஜ்பாய்நிருபர்களிடம் கூறியதாவது:

காவிரி நீரை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற காவிரி நதி நீர் நடுவர் மன்ற உத்தரவை அடிப்படையாகக்கொண்டுதான் மத்திய அரசு செயல்படுகிறது.

இந்த ஆண்டு காவிரி பாசனப் பகுதியில் கடும் நீர் வறட்சி ஏற்பட்டுள்ளது. மேட்டூருக்கு இந்த ஆண்டு நீர் வரத்து 85சதவிகிதம்தான் இருந்தது.

எனவே இருக்கும் நீரை சமமாக பகிர்ந்து கொள்ள, இரண்டு மாநிலங்களிடையேயும் புரிந்து கொள்ளுதலும்ஒத்துழைப்பும் மிக அவசியம்.

விஞ்ஞான ரீதியாக பல முன்னேற்றங்கள் ஏற்பட்டு விட்டாலும் கூட நீர் வரத்து குறித்து அந்தந்த சீசனின்இறுதியில்தான் அறிந்து கொள்ள முடிகிறது. ஆனால் விவசாய பணிகள் சீசனின் துவக்கத்திலேயே நடைபெறதொடங்கி விடுகிறது.

வடகிழக்கு பருவமழை பொய்க்காது என்ற நம்பிக்கை உள்ளது. எனவே சம்பா பயிர் சாகுபடி நல்ல முறையில்இருக்கும் என்றும் அரசு எதிர்பார்க்கிறது.

நீர்ப் பஞ்சம் குறித்து தொடர்ந்து கண்காணிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தேவையான அனைத்துஉதவிகளையும் வழங்கும் வகையில் மீண்டும் காவிரி நதி நீர் ஆணைய கூட்டம் கூட்டப்படும்.

ஒற்றுமையுடனும், ஏற்புத்தன்மையுடனும் அணுகினால் காவிரி விவசாயிகளின் பிரச்சனைக்கு நல்ல சுமுகமான தீர்வுகாண முடியும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+