For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டான்சி: ஜெ.க்கு எதிராக கோர்ட்டில் சுவாமி வாதம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

டான்சி வழக்கில் சுப்ரமணியம் சுவாமி கோர்ட்டில் ஆஜராகி ஜெயலலிதாவுக்கு எதிராக இன்று (வெள்ளிக்கிழமை)வாதாடினார்.

உயர்நீதிமன்றத்தில் கடந்த 9 நாட்களாக டான்சி வழக்கில் விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கை முதலில்பதிவுசெய்தவர் என்ற முறையில் சுப்ரமணியம் சுவாமி கோர்ட்டில் ஆஜராகி வாதாட அனுமதி வழங்கப்பட்டது.

அதன்படி இன்று சுவாமி கோர்ட்டில் ஜெயலலிதாவுக்கு எதிராகத் தனது வாதத்தை எடுத்துவைத்தார். அதன் விவரம்வருமாறு,

முதலில் முதல்வராக இருந்த ஜெயலலிதா அரசுக்குச் சொந்தமான நிலத்தை வாங்கியது குற்றம். அடுத்து அரசின்கொள்கைப்படி நலிவடைந்த தொழிற்சாலைகளை மட்டுமே தனியார் மயமாக்கவேண்டும். நன்றாகஓடிக்கொண்டிருக்கும் தொழிற்சாலைகளை அல்ல. மேலும் அதை வாங்கி எந்தவித முன்னேற்றமும் அடையச்செய்யவில்லை.

டான்சி பவுண்டரி மற்றும டான்சி எனாமல்டு வயர்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஜெயா பப்ளிகேஷன்ஸ் மற்றுமசசிஎண்டர்பிரைசஸ் ஆகிய நிறுவனங்களால் வாங்கப்பட்ட பிறகு இயங்காமலே உள்ளன. இது அரசின்கொள்கைகளுக்கு எதிரானது.

மேலும் அவர்கள் அளித்த டெண்டரில் அந்த நிறுவனத்தில் இருந்த எந்திரங்கள், அவற்றின் நிலை, அங்குள்ளகருவிகளின் ஸ்டாக் பற்றிக் குறிப்பிடப்படவில்லை. மேலும் அந்த நிலத்தின் குறைந்தபட்ச மதிப்பும் டெண்டரில்குறிப்பிடப்படவில்லை.

இவ்வாறு சுவாமி தனது வாதத்தில் கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X