For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாதுகாப்பு அமைச்சராகிறார் கே.சி. பந்த்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

மத்திய அமைச்சரவை திங்கள்கிழமை மாற்றி அமைக்கப்படவுள்ளது. பாதுகாப்புத் துறை அமைச்சராக திட்டக்கமிஷனின் துணை தலைவர் கே.சி. பந்த் பதவி ஏற்பார் என்று கூறப்படுகிறது.

மேலும் புதிதாக சிலர் அமைச்சரவையில் சேர்க்கப்படுவார்கள் என்றும் அமைச்சர்களின் இலாகாக்களிலும் சிலமாறுதல்கள் செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தெஹல்கா ஊழல் காரணமாகப் பாதுகாப்புத் துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ஜார்ஜ் பெர்ணான்டசுக்குமீண்டும் அமைச்சர் பதவி கொடுக்கப்படுமா என்பது பற்றித் தெரியவில்லை.

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங்தான், தற்போது பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் கூடுதல் பொறுப்புவகித்து வருகிறார்.

ஆப்கானிஸ்தானில் தற்போது அமெரிக்கா நடத்தி வரும் தாக்குதலையடுத்து, வெளியுறவுத் துறையில் ஜஸ்வந்த்சிங்கின் பணி அதிகமாகியுள்ளது.

மேலும், தற்போதுள்ள சூழ்நிலையில் பாதுகாப்புத் துறையிலும் முழுமையாகக் கவனம் செலுத்துவதற்கு ஏற்பத்தான்இத்துறைக்கென்று தனியாக ஒரு அமைச்சரை நியமிக்க பிரதமர் முடிவெடுத்துள்ளார்.

ராஜீவ் காந்தி பிரதமராக பதவி வகித்த போது பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த அனுபவம் கே.சி.பந்த்துக்குக் கைகொடுக்கும் என்று வாஜ்பாய் முழுமையாக நம்புகிறார்.

மேலும், சமீபத்தில் காஷ்மீர் அமைதிப் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவராக பந்த் ஆற்றிய சீரிய பணியைமறந்துவிட பிரதமர் தயாராக இல்லை. அதனால் பாதுகாப்புத் துறை அமைச்சர் பந்த் தான் என்று உறுதியாகநம்பலாம்.

சமீபத்தில் அலையன்ஸ் விமானம் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட சம்பவதிதற்கு பின் விமான போக்குவரத்து துறைஅமைச்சர் ஷாநாவால் ஹுசைன் மீது குற்றச்சாட்டுகள் பெருகி வருகின்றன.

இதனால் அவர் பதவி நீக்கப்படலாம் அல்லது அவரது இலாகா மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த முறைபுதிதாக அமைச்சர்களாக நியமிக்கப்படுபவர்களில் பா.ஜ.கவைச் சேர்ந்தவர்கள் யாரும் இருக்கமாட்டார்ள் என்றும்கூறப்படுகிறது.

தே.ஜ. கூட்டணியில் சமீபத்தில் மீண்டும் இணைந்துள்ள திரிணாமுல் காங்கிரஸ், பா.ம.கவைச் சேர்ந்தவர்களுக்குஅமைச்சர் பதவி கொடுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.

நவம்பர் 19ல் கூடுகிறது நாடாளுமன்றம்

நாடாளுமன்றக் கூட்டம் அடுத்த மாதம் (நவம்பர்) 19ம் தேதி கூடவிருக்கிறது. இந்த கூட்டம் 5 வார காலம்நடைபெறும். கூட்டத்தொடர் டிசம்பர் மாதம் 21ம் தேதி வரை நடைபெறும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X