"உள்ளாட்சித் தேர்தலுக்கு நாங்க ரெடி" - தேர்தல் ஆணையர்
சென்னை:
தேர்தல் ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது என்று மாநில தேர்தல் ஆணையாளர்பி.எஸ்.பாண்டியன் கூறினார்.
வரும் 16 மற்றும் 18 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலுக்கான ஏற்பாடுகள்அனைத்தும் தயார் நிலையில் உள்ளதாக பாண்டியன் தெரிவித்தார். இதுகுறித்து இன்று (சனிக்கிழமை)நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
வாக்குச் சாவடிகள், வாக்குச்சீட்டுகள், அழியாத மை மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும்செய்தாகிவிட்டது.
நாளை(ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.30 மணியுடன் முதல் கட்ட வாக்குப்பதிவிற்கான தேர்தல் பிரச்சாரம்முடிவடைகிறது.
அதற்குப் பிறகு யாரும் ஊர்வலம் செல்வதோ, மைக் மூலம் பிரச்சாரம் செய்வதோஇ டி.வி. போன்ற எலக்ட்ரானிக்மீடியாக்கள் மூலம் பிரச்சாரம் செய்வதோ கூடாது. அவ்வாறு செய்பவர்கள் கண்டறியப்பட்டு கடுமையாகத்தண்டிக்கப்படுவார்கள்.
மேலும் வாக்குப்பதிவு நாட்களில் ஏதாவது தவிர்க்கமுடியாத பிரச்சனைகள் ஏற்பட்டு, தேர்தல்தள்ளிவைக்கப்படுமானால் அந்த பகுதிக்கான தேர்தல் 19ம் தேதி நடத்தப்படும்.
அனைத்து பகுதிகளுக்கும் வாக்கு எண்ணும் பணி 21ம் தேதி ஆரம்பிக்கப்படும். அன்று பிற்பகலுக்கு மேல் தேர்தல்முடிவுகள் பற்றிய முதல் அறிவிப்பு வெளியாகும் என்றார் பாண்டியன்.












Click it and Unblock the Notifications