அமெரிக்கா மீது மீண்டும் விமானத் தாக்குதல் நடத்துவோம்- பின்லேடன் அறிவிப்பு
தோஹா:
அமெரிக்கா மற்றும் பிரிட்டன் மீது மேலும் விமானத் தாக்குதல்கள் நடத்துவோம் என பின் லேடனின் அல்-காய்தாஇயக்கம் அறிவித்துள்ளது.
இந் நிலையில் கடந்த செப்டம்பர் 11ம் தேதி நடத்தியதைப் போல அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளின்மீது மீண்டும் விமானங்களைக் கடத்தி தாக்குதல் நடத்துவோம் என்று அல்-காய்தா இயக்கம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அல்காய்தா இயக்கத்தின் நிர்வாகிகளில் ஒருவரும், பின் லேடனுக்கு நெருங்கிய உதவியாளருமானசுலைமான் அபு கய்த், கதாரிலிருந்து ஒளிபரப்பாகும் அல்-ஜஸீரா டிவிக்கு இன்று பேட்டியளித்தார். அவர்கூறுகையில்,
கடவுளின் விருப்பம் அதுவாக இருக்குமானால், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் மீது நாங்கள் நடத்தும் விமானத்தாக்குதல் நிற்காது. பாலஸ்தீனியர்களுக்கும், யூதர்களுக்கும் அமெரிக்காவும் பிரிட்டனும் தரும் ஆதரவைநிறுத்தும்வரை எங்களின் இந்தத் தாக்குதல் புயல் ஓயாது.
மேலும் அவர்கள் இராக்கிலுள்ள துருப்புக்களை விலக்கிக்கொண்டு, அரேபியத் தீபகற்பத்தை காலி செய்துவிட்டுக்கிளம்ப வேண்டும்.
அமெரிக்கா, பிரிட்டனில் உள்ள முஸ்லீம்கள் உயர்ந்த கட்டடங்களில் வசிப்பதையோ, விமானத்தில்பயணிப்பதையோ தவிர்க்க வேண்டும். எந் நேரத்திலும் நாங்கள் விமானங்களைக் கடத்தி தாக்குதலைஆரம்பிப்போம்.
இவ்வாறு அவர் அந்தப் பேட்டியில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications