கர்நாடகத்துக்கு உத்தரவு போட்டால் போதுமா?: விவசாயிகள் கோபம்
திருச்சி:
தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக அரசை காவிரி நதி நீர் ஆணையம்கேட்டுக்கொண்டால் மட்டும் போதாது, அதை செயல்படுத்த வேண்டும் என்று காவிரி விவசாயிகள் சங்கம்கூறியுள்ளது.
இதுகுறித்து அச்சங்கத்தின் துணைத்தலைவர் மகாதனபுரம் ராஜாராம் வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறியிருப்பதாவது,
காவிரி ஆறு வரும் பாதையில் உள்ள அணைகளில் கர்நாடகத்தில் 90 டி.எம்.சி தண்ணீர் உள்ளது. ஆனால்தமிழகத்துக்கு 24 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட்டாலே போதும்.
காவிரி டெல்டாப் பகுதியில் பயிர்களின் நிலை மிகவும் பரிதாபமாக இருக்கிறது.
இன்னும் இந்தப் பகுதியில் 1.37 லட்சம் ஏக்கர் நிலம் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக அறுவடை செய்யப்படாமல்இருக்கிறது. இதுவரை 1.50 லட்சம் ஏக்கர் நிலத்தில் உள்ள பயிர்கள் தான் அறுவடை செய்யப்பட்டுள்ளன.
அடுத்த போகத்திற்கு விதை பாவ, நாற்றாங்கலுக்கு பாய்ச்சவே தண்ணீர் இல்லாத நிலைமை உள்ளது. அதற்குஅறுவடை செய்யும் வரை குறைந்தது 180 டி.எம்.சி தண்ணீராவது தேவைப்படும்.
கர்நாடக அரசின் பிடிவாதத்தால் இதுவரை இந்த ஆண்டு மட்டும் சுமார் ரூ.300 கோடி மதிப்புள்ள நெல் பயிர்கள்தண்ணீர் இல்லாமல் கருகி அழிந்துவிட்டன
எனவே காரிவி ஆணையம் கர்நாடக அரசைத் தண்ணீர் திறந்துவிடுமாறு கேட்டால் மட்டும் போதாது, அதைகர்நடக அரசு நிறைவேற்றுகிறதா என்று ஆணையம் கண்காணிக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications