அப்பாவை யாராலும் பிடிக்க முடியாது- பின்லேடன் மகன் பேட்டி
லண்டன்:
என் தந்தையை யாராலும் பிடிக்க முடியாது என்று பின் லேடனின் மகன் அப்துல்லா பின் லேடன், பாகிஸ்தான்பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.
இந்நிலையில் பின் லேடனின் 42 பிள்ளைகளில் ஒருவரான அப்துல்லா பின்லேடன் பாகிஸ்தானில் இருந்துவெளியாகும் பத்திரிக்கைக்கு பேட்டியளித்துள்ளதாக, லண்டனில் வெளியாகும், சன்டே மிரர் பத்திரிக்கைகூறுகிறது.
அந்தப் பேட்டியின் விவரம் வருமாறு,
அமெரிக்க, பிரிட்டன் என எத்தனை நாடுகள் சேர்ந்து எத்தனை விமானங்களில் வெடிகுண்டுகளைப் போட்டாலும்,அவர்களால் என் தந்தையை மட்டும் பிடிக்கவே முடியாது. ஆப்கான் மண் அவ்வளவு எளிதில் என் தந்தையைக்பலிகொடுத்துவிடாது. அவர் எதிரிகளின் கண்களுக்குத் தெரியாமல் மறைந்துவிடுவார்.
கடந்த செப்டம்பர் 11ம் தேதியே என் தந்தை 300 வீரர்களுடன் குதிரைகள் மூலம் தப்பிவிட்டார்.
அவர் பாதுகாப்பாக உள்ளார். யாரும் அந்த இடத்தைக் கண்டுபிடிக்க முடியாது. மேலும் அன்றே காபூலில் இருந்துகம்யூட்டர்கள் மற்றும் தொலைத் தொடர்பு சாதனங்களை ஏற்றிக்கொண்டு 60 டிரக்குகள் தந்தையின்மறைவிடத்துக்குச் சென்றுள்ளன.
இத் தகவல்கலை எனது தந்தைக்கு நெருக்கமான நபர் என்னிடம் தெரிவித்தார். நான் அவரைப் பார்த்தும் பலமாதங்கள் ஆகிவிட்டன.
என் தந்தை பல ஆண்டுகளாக அமெரிக்காவுக்கு பெரும் சவாலாக இருந்துவருகிறார். ஆனால் அவரை எப்போதுநேரில் பார்ப்பேன் என்று தெரியவில்லை.
இவ்வாறு அப்துல்லா கூறினார். அப்துல்லாவுக்கு 18 வயதாகிறது.
இந்தப் பேட்டிக்கு ஒரு வாரத்திற்கு முன்பு அந்தப் பாகிஸ்தான் பத்திரிக்கையாளர்கள், தலிபான் ஏஜெண்டுகளைஅணுகி அனுமதி வாங்கியுள்ளனர். பிறகு இஸ்லாமாபாத்தில் ஒரு ரகசியமான இடத்தில் வைத்து இந்தப் பேட்டிஎடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
அமெரிக்காவில் செப்டம்பர் 11ம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு, பின் லேடன் குடும்பத்தினர் அளிக்கும்முதல் பேட்டி இதுதான்.