For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருப்பூர் நீதிமன்றத்துக்கு போலீஸ் மனித வெடிகுண்டு மிரட்டல்

By Staff
Google Oneindia Tamil News

திருப்பூர்:

போலீஸ் உடையில் ஒரு மனித வெடிகுண்டு நீதிமன்றத்தில் நுழைந்துள்ளதாகவும் மாலைக்குள் அந்த குண்டுவெடிக்கும் எனவும் மிரட்டி வந்த கடிதத்தையடுத்து திருப்பூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூரில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு இன்று ஒரு கடிதம் வந்தது.

தமிழில் எழுதப்பட்டிருந்த அந்தக் கடிதத்தில் ஒரு மனித வெடிகுண்டு தீவிரவாதி நீதிமன்றத்துக்குள்நுழைந்துவிட்டதாகவும் காலை 10.30 மணியில் இருந்து மாலை 4.30 மணிக்குள் அந்த குண்டு வெடித்துச் சிதறும்எனவும் கூறப்பட்டிருந்தது.

சில நீதிமன்ற ஊழியர்களின் பெயரையும் குறிப்பிட்டு நீங்கள் எப்படியாவது தப்பி விடுங்கள் என்றும்கூறப்பட்டிருந்தது. இதையடுத்து போலீசாருக்கு நீதிமன்ற ஊழியர்கள் தகவல் கொடுத்தனர்.

உடனடியாக வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள், தீயணைப்பு வண்டிகளுடன் போலீசார் அங்கு விரைந்தனர்.சோதனையிட வந்த போலீசாரில் யார் மனித வெடிகுண்டோ என்று அவர்களையே சந்தேகத்துடன் பார்க்கும் நிலைஏற்பட்டது.

ஒரு வழியாய் நீதிமன்றத்தில் இருந்த அனைவரையும் வெளியேற்றி அவர்களை வெளியில் வைத்துசோதனையிட்டனர். அனைத்து போலீசாரின் அடையாள அட்டைகளையும் அதிகாரிகள் சோதனையிட்டனர்.

இந்த நீதிமன்ற வளாகத்தில் இருந்த பிற அலுவலகங்களையும் சோதனையிட்டனர். உள்ளே நிறுத்தப்பட்டிருந்தஅனைத்து வாகனங்களும் சோதனைக்குள்ளாயின.

ஆனால், மாலை வரை எந்த குண்டும் வெடிக்கவில்லை.

இந்த நீதிமன்ற வளாகத்துக்கு கடந்த 6 மாதத்தில் வந்துள்ள 8-வது வெடிகுண்டு மிரட்டல் இது என்பதுகுறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த மிரட்டல்களை சாதாரணமாக எடுத்துக் கொள்ள போலீசார் தயாராக இல்லை.ஒவ்வொரு முறையும் தீவிர சோதனை நடத்திச் சென்றுள்ளனர் போலீசார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X