முஷாரபுடன் காலின் பாவல் பேச்சு
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் வந்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் காலின் பாவல் அந் நாட்டு அதிபர் பர்வேஸ்முஷாரபுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
காலின் பாவலின் வருகைக்கு எதிராக பாகிஸ்தான் முழுவதும் பல்வேறு அமைப்புகள் மாபெரும் போராட்டங்கள்நடத்தி வருகின்றன. இதனால் பலத்த பாதுகாப்புகளுக்கு இடையே பாவல் பாகிஸ்தான் வந்துள்ளார்.
இன்று அப்துல் சத்தாருடன் அவர் நடத்திய பேச்சுவார்த்தையின்போது அமெரிக்க பாதுகாப்புத்துறைச் செயலாளர்காண்டலீஸ்ஸா ரெய்சும் உடனிருந்தார். இந்தப் பேச்சுவார்த்தை மிக நீண்ட நேரம் நடந்தது.
ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் தொடங்கிய பிறகு பாகிஸ்தான் வந்த முதல் அமெரிக்க தலைவர் இவர் தான்.அடுத்து இன்று மாலை அவர் இந்தியா வருகிறார்.
பாகிஸ்தானின் உள்நாட்டுப் பிரச்சனையை சமாளிப்பது, பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள அமெரிக்க நிதிஉதவி அளிப்பது ஆகியவை குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்தும், பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு சிக்கல் குறித்தும்அவர்கள் பேச்சு நடத்தினர்.
காலின் பாவலின் வருகையை ஒட்டி இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல் உச்ச கட்டத்தை அடைந்துள்ளது.கடந்த 10 மாதங்களில் இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்துள்ள பெரிய சண்டை இது தான்.
எல்லையில் நுழைந்து கண்ணி வெடிகளை வைக்க முயன்ற தீவிரவாதிகளை இந்திய ராணுவத்தின் லோக்கல்பட்டாலியன் சுட்டுத் தள்ளியது.
காஷ்மீர் பிரச்சனை குறித்து காலின் பாவல் பேச வேண்டும் என பாகிஸ்தான் நிர்பந்தித்து வருகிறது.
ஆனால், காஷ்மீர் தீவிரவாதம் குறித்தும், இந்தத் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அளித்து வரும் பயிற்சி மற்றும்இந்தத் தீவிரவாதிகளின் முகாம்களையும் அமெரிக்கா அழிப்பது ஆகியவை குறித்து மட்டுமே பேச இந்தியாதயாராக உள்ளது. காஷ்மீர் பிரச்சனையில் அமெரிக்கா உள்பட எந்த நாடு தலையிடுவதையும் இந்தியாஅனுமதிக்கத் தயாராக இல்லை.
ஆனால், இன்று காலின் பாவலை அப்துல் சத்தார் சந்தித்தபோது காஷ்மீர் விவகாரங்களுக்கான அமைச்சர் செளகத்அஜீசும் உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் கிளப்பியிருக்கும்என்று தெரிகிறது.
இந்தச் சந்திப்பையடுத்து பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரபையும் காலின் பாவல் சந்திக்கிறார்.
இந் நிலையில் இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதல் குறித்து அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்கவலை தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் பிரச்சனை உச்சகட்டத்தில் உள்ள நிலையில் இந்தியாவுமபாகிஸ்தானும் மோதலைத் தவிர்க்க வேண்டும் என அவர் கோரியுள்ளார்.












Click it and Unblock the Notifications