திமுகவினர் கைதால் திமுகவுக்குத்தான் வாக்குகள் அதிகரிக்கும்: கருணாநிதி
சென்னை:
முன்னெச்செரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் திமுகவினரை கைது செய்வதன் மூலம் திமுகவுக்கு கிடைக்கும்வாக்குகள் அதிகமாகுமே தவிர குறையாது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
உள்ளாட்சித் தேர்தலையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திமுகவினர் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து சென்னையில் திங்கள்கிழமை (நேற்று) கருணாநிதி நிருபர்களிடம் கூறியதாவது:
முன்னெச்செரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் ஞாயிற்றுக்கிழமை இரவு திமுக மாவட்டச் செயலாளர் வேணுகைது செய்யப்பட்டுள்ளார்.மேலும் பல திமுகவினரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து நான் அறிக்கையும் வெளியிட்டிருந்தேன். இது போன்ற கைது சம்பவங்கள் தொடர்ந்து நடந்தால்அறப்போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் நான் கூறியுள்ளேன்.
திமுகவினர் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து ஆற்காடு வீராசாமியும் டி.ஜி.பியிடம் பேசியுள்ளார்.
எங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதால் எங்களுக்கு கிடைக்கும் வாக்குகள் அதிகரிக்குமேதவிர குறையாது.












Click it and Unblock the Notifications