வாக்குச் சீட்டுகளை அள்ளிக்கொண்டு ஓடிய வன்முறை கும்பல்
சென்னை:
சென்னை-துறைமுகம் பகுதியில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் புகுந்த வன்முறைக் கும்பல், அங்கிருந்த வாக்குச்சீட்டுக்களை அள்ளிக் கொண்டு ஓடிவிட்டது.
இன்று (செவ்வாய்க்கிழமை) காலை சென்னை மாநகராட்சிக்கு தேர்தல் தொடங்கியது. காலையில்அமைதியாகதொடங்கிய வாக்கு பதிவில் 11 மணிக்கு மேல் வன்முறை வெடித்தது சென்னையின் பல இடங்களிலும்அதிமுகவினர் வன்முறையில் ஈடுபட்டனர். வாக்கு சாவடிகளை கைப்பற்றி கள்ள ஓட்டு போட்டனர்.
துறைமுகம் பகுதியையும் விட்டு வைக்கவில்லை வன்முறை கும்பல். துறைமுகம் தொகுதி, ராமசாமி தெருவிலுள்ளவாக்கு சாவடியில் நுழைந்த வன்முறை கும்பல் கள்ள ஓட்டு போட்டுவிட்டு, வாக்குச் சீட்டுக்களையும் தூக்கிச்சென்றுவிட்டது.
இது குறித்து அங்கு தேர்தல் பணயில் ஈடுபட்டிருந்த தேர்தல் அதிகாரி நந்தகுமார் கூறுகையில்,
காலை 11.05 மணியளவில் 20 பேர் கொண்ட கும்பல் வாக்கு சாவடிக்குள் நுழைந்தது. என்ன நடக்கிறது என்றுசுதாரிப்பதற்கு முன்பாகவே வாக்காளர்களை அப்புறப்படுத்திய அந்தக் கும்பல் விறுவிறுவென்று கள்ள ஓட்டுபோடத் தொடங்கிவிட்டது.
அதன் பின் 3 வாக்குச்சீட்டு கட்டுகளையும் (150 வாக்குச் சீட்டுகள்) எடுத்துக் கொண்டு தாங்கள் வந்தவாகனங்களில் சென்றுவிட்டனர். சற்று நேரம் கழித்து சில வாக்குச் சீட்டுகளை மட்டும் கொண்டு வந்து போட்டுவிட்டு ஓடிவிட்டனர்.
2 போலீசார் மட்டுமே காவலுக்கு இருந்தனர். ஆனால் அவர்கள் இவ்வளவையும் பார்த்துக் கொண்டு சும்மாவேநின்று கொண்டிருந்தனர் என்றார் நந்தகுமார்.