For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஒற்றுமையாக இருங்கள்: தமிழ் கட்சிகளுக்கு புலிகள் எச்சரிக்கை

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு:

டிசம்பர் மாதம் நடைபெறவிருக்கும் இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் கட்சிகள் அனைத்தும் தனியாகக்கூட்டணி அமைத்து வெற்றி பெற வேண்டும் என்று விடுதலைப்புலிகளுக்கு ஆதரவளித்து வரும் "ஈழப் படை" என்றஅமைப்பு கூறியுள்ளது.

அப்படி தனியாகக் கூட்டணி அமைக்காவிட்டால், அவர்கள் நாட்டை விட்டே விரட்டியடிக்கப்படுவார்கள் என்றும்அந்தப் படை எச்சரித்துள்ளது.

இதுகுறித்து, ஏராளமான துண்டுப் பிரசுரங்களையும் நோட்டீசுகளையும் ஈழப் படையைச் சேர்ந்தவர்கள்,விடுதலைப் புலிகளின் கைவசம் உள்ள மட்டக்களப்பு பகுதிகளில் விநியோகித்துள்ளனர்.

இலங்கையில் உள்ள தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒரே குடையின் கீழ் வரவேண்டும். அவ்வாறு வராவிட்டால்அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் நாட்டை விட்டே விரட்டப்படுவார்கள் என்று அந்தத் துண்டுப் பிரசுரங்களில்கூறப்பட்டுள்ளது.

தமிழ் அரசியல்வாதிகள் ஒற்றுமையுடன் சேர்ந்து போராடினால்தான் தமிழர்களின் பிரச்சனைகளைப் போக்கமுடியும்; ஈழத் தமிழர்களுக்கும் விடுதலை கிடைக்கும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

எந்தக் கட்சியாவது தனியாகப் போட்டியிட்டால், தேர்தல் பிரச்சாரத்தின்போது அதற்கான விளைவுகளை அக்கட்சிசந்திக்க நேரிடும் என்றும் அந்தத் துண்டுப் பிரசுரங்களில் ஈழப் படை மறைமுகமாக அச்சுறுத்தியுள்ளது.

இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு இதுதான் தக்க தருணம். இதை தமிழ்கட்சிகளின் அரசியல்வாதிகள் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் என்றும் ஈழப் படையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X