காலையில் பரீட்சை... மாலையில் பிரச்சாரம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை மேயர் தேர்தலில் மதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மனோகரன், தேர்தல் பிரசாரத்தின் கடைசிநாளான ஞாயிற்றுக்கிழமை பிரசாரத்தை கொஞ்ச நேரம் ஒத்திவைத்து விட்டு பி.ஏ. தேர்வை எழுதிய பின்னர்தொடர்ந்து தனது பிரசாரத்தை மேற்கொண்டார்.
மனோகரன் தற்போது அஞ்சல் வழிக் கல்வி மூலம் சென்னை பல்கலைக்கழகத்தில் பி.ஏ. படித்து வருகிறார். மேயர்தேர்தலிலும் போட்டியிடும் மனோகரன் கடந்த சில நாட்களாக தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் பிரசாரத்தின் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை அவருக்கு பி.ஏ. தேர்வு இருந்தது.
இதையடுத்து காலையில் தேர்வு எழுதினார் மனோகரன். பின்னர் 1 மணிக்குத் தேர்வு முடிந்ததும் வெளியே வந்தஅவர் மீண்டும் தனது பிரசாரத்தைத் தொடர்ந்தார்.
மாலையில் ஆர்.கே.நகரில் தனது பிரசாரத்தை முடித்துக் கொண்டார் மனோகரன்.












Click it and Unblock the Notifications