திமுகதான் வன்முறையை தூண்டும்: பன்னீர்
சென்னை:
அதிமுக வன்முறையை தூண்டியதாக வரலாறு கிடையாது. திமுக வன்முறையை தூண்டியதாக வரலாறு உண்டு என்றுதமிழக முதல்வர் பன்னீர்செல்வம் திமுக மீது குற்றம் சுமத்தியுள்ளார்.
தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக தனது சொந்த ஊரான பெரியகுளத்திற்கு திங்கள்கிழமை(நேற்று) புறப்பட்டுச் சென்றார் பன்னீர்செல்வம் உள்ளாட்சி தேர்தலில் வாக்களிப்பதற்காக தன் குடும்பத்தாருடன்பெரியகுளம் சென்றார் பன்னீர் செல்வம்.
சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
"முதல்வராக பொறுப்பேற்ற பின் சொந்த ஊருக்கு செல்லும் உங்கள் மனநிலை எவ்வாறு உள்ளது?" என்று நிருபர்கள்கேட்டபோது, "நான் எப்போதுபோல் அதிமுக தொண்டனாகத்தான் என் சொந்த ஊருக்கு செல்கிறேன்" என்றார்.
மேலும், "கடந்த ஆண்டுகளில் அதிமுக வன்முறையை தூண்டியதாக எந்த விதமான வரலாறும் கிடையாது. திமுகதான் வன்முறையை தூண்டும். திமுக வன்முறையை தூண்டியதாக வரலாறு உண்டு. யார் வன்முறையைதூண்டுவார்கள் என்று தமிழக மக்களுக்கும் தெரியும்" என்றார் பன்னீர்செல்வம்.