இன்று முஷாரப்பைச் சந்திக்கிறார் பவல்
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்பை செவ்வாய்க்கிழமை (இன்று) சந்தித்துப் பேசவுள்ளார் அமெரிக்கவெளியுறவுச் செயலாளர் காலின் பவல்.
மேலும், பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிற்கு பவல் விஜயம் செய்யும் இந்த வேளையில், இந்திய எல்லைப்பகுதிகளில் உள்ள பாகிஸ்தானின் முக்கிய ராணுவ முகாம்களை இந்திய ராணுவம் தாக்கி அழித்துள்ளது.
பாகிஸ்தானின் 11 ராணுவ முகாம்கள் முழுவதுமாகச் சேதமடைந்தன. மேலும் காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற 12தீவிரவாதிகளும் இத்தாக்குதலின்போது கொல்லப்பட்டனர்.
முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் இந்தியா வந்தபோது, பாகிஸ்தான் தீவிரவாதிகள் காஷ்மீரில் 40அப்பாவி மக்களைப் படுகொலை செய்தனர். அதற்குப் பதிலடியாகவே, தற்போது பவல் வந்திருக்கும் வேளையில்பாகிஸ்தான் ராணுவ முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆப்கானிஸ்தானில் நடக்கும் அமெரிக்க தாக்குதலைப் பற்றிப் பேச்சு நடத்துவதற்காக நேற்று மாலை பாகிஸ்தான்வந்து சேர்ந்த பவல், பாகிஸ்தான் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று மாலை இந்தியாவுக்கும் வரவுள்ளார்.












Click it and Unblock the Notifications