10 அடி ஆழ சாக்கடையில் விழுந்து சிறுவன் சாவு

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்:

10 அடி ஆழமுள்ள சாக்கடைக்குள் தவறி விழுந்த சிறுவன் இறந்து போனான். இந்த துயர சம்பவம் தஞ்சாவூரில்நடந்துள்ளது.

தஞ்சாவூரின் வடக்கு அலங்கம் பகுதியில் வசித்து வருபவர் சச்சு. இவர் ஒரு கூலித் தொழிலாளி. இவரது மகன் மணி(வயது 3).

சம்பவ தினத்தநன்று சிறுவன் மணி தன்து வீட்டு வாசலில் மகிழ்சியாக விளையாடிக் கொண்டிருந்தான். அப்போதுபகுதியில் சில மாடுகள் ஓடிவந்தன.

இதை பார்த்து பயந்தபோன மணி ரோட்டில் வேகமாக ஒடினான். அப்போது வழியிலிருந்த 10 அடி ஆழம்கொண்ட சாக்கடைக்குள் தவிறி விழுந்தான் சிறுவன். அதில் 6 அடிக்கு சாக்கடை நீர் ஓடிக் கொண்டிருந்தது.

சிறுவன் சாக்கடைக்குள் விழுந்ததை பார்த்த மக்கள் அபயக் குரல் எழுப்பினர். இதைக் கேட்டு சச்சுவும், அவரதுமனைவியும் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர்.

குழந்தை சாக்கடைக்குள் விழுந்துள்ளதை கண்டு பயந்த அவர்கள் குழந்தையை காப்பாற்ற வேண்டி உடனடியாகபோலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் தீயணைப்பு படையுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

தீயணைப்பு வீரர்கள் குழந்தையை மீட்க சாக்கடைக்குள் இறங்கினர். ஆனாலும் அவர்களால் சிறுவனை உயிருடன்மீட்க முடியவில்லை. சிறுவனின் இறந்த உடலையே மீட்க முடிந்தது.

குழந்தையை பறி கொடுத்த பெற்றோர் கதறி அழுத காட்சி காண்போரையும் கண்ணீரில் ஆழ்த்தியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+