தேர்தல் மோதல்: மருத்துவமனையில் 7 பேர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தேர்தல் மோதல் காரணமாக காயமடைந்து 7 பேர் சென்னை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உள்ளாட்சித் தேர்தலின் முதல் கட்ட வாக்குப் பதிவின்போது பெரும் வன்முறை வெடித்தது. இதில் வாக்குச் சாவடிகள் சூறையாடப்பட்டன,வாக்குப் பெட்டிகள் கைப்பற்றப்பட்டன, பல இடங்களில் தீவைத்துக் கொளுத்தப்பட்டன.
சென்னையில் நடந்த மோதலில் 7 பேர் காயமடைந்து சென்னை பொது அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில்திமுகவினர் யாரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுகவைச் சேர்ந்த 3 பேர் இதில் அடங்குவர். மற்றவர்கள் விடுதலைச் சிறுத்தைகள், வன்னியர் சங்கம் மற்றும் தமாகாவைச் சேர்ந்தவர்கள்.












Click it and Unblock the Notifications