சென்னை முழுவதும் மறு தேர்தல் நடத்த இளங்கோவன் கோ--ரிக்-கை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடந்த உள்ளாட்சி தேர்தலில் வன்முறை நடந்தததாலும், கள்ளஓட்டுக்கள் போடப்பட்டதாலும் மீண்டும் சென்னையில் தேர்தல் நடத்த வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்இளங்கோவன் கூறியுள்ளார்.

செவ்வாய்க்கிழமை சென்னையில் முதல்கட்ட உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது, அமைதியாக நடந்துகொண்டிருந்த தேர்தலில் திடீரென்று வன்முறை வெடித்தது. கள்ளஒட்டுகளும் போட்டப்பட்டன.

இதையடுத்து சென்னையில் மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் இளங்கோவன்கூறியுள்ளார். இது குறித்து அவர் சென்னையில் இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:

செவ்வாய்க்கிழமை சென்னையில் நடந்த தேர்தலில் பெருமளவு கள்ள ஓட்டு போடப்பட்டுள்ளது. சுமார் 300 வாக்குசாவடிகளில் கள்ள ஓட்டு போடப்பட்டுள்ளது. வாக்கு சீட்டுகளும் கிழித்து தெருவில் வீசப்பட்டிருந்தன.

சென்னையில் மறு தேர்தல் நடத்தப்பட வேண்டும். இது குறித்து எங்கள் கூட்டணி கட்சிகளின் தலைவர்களுடன்சென்று ஆளுனர் ரங்கராஜனை சந்தித்து மனு கொடுக்கவுள்ளோம்.

தேர்தல் வன்முறை குறித்து அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் ரமேஷ் சென்னிதாலா சென்னை நகர போலீஸ்கமிஷனர் முத்துகருப்பனுடன் தொலைபேசி மூலம் பேச முயன்றார். ஆனால் அவர் பேச மறுத்துவிட்டார்.

கராத்தே தியாகராஜன் ரவுடி கும்பலுடன் வந்து வன்முறையில் ஈடுபட்டு பகிரங்கமாக கள்ள ஓட்டு போட்டுள்ளார்.அவரை போலீதார் கைது செய்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்னையில் மறு தேர்தல் நடத்தப்பட்டால் மத்திய அரசு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றுகூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+