இலங்கை அரசியல் களத்தில் கிரிக்கெட் வீரர்கள்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான அர்ஜுனா ரணதுங்கா இலங்கை நாடாளுமன்ற தேர்தலில்போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகம்மதுஅசாருதீன் கொழும்பு செல்கிறார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தவர் ரணதுங்கா. இலங்கைக்கு பல வெற்றிகளை வாங்கித்தந்தவர் அவர். 1996ல் உலக கோப்பையை இலங்கை வென்ற போதும் அவர்தான் இலங்கை கிரிக்கெட் அணியின்கேப்டனாக இருந்தார்.

தற்போது கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ள அவர், கிரிக்கெட் களத்தைவிட்டு அரசியல் களத்தில்குதிக்கவுள்ளார்.

வரும் டிசம்பர் மாதம் 5ம் தேதி நடைபெறவுள்ள இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் சந்திரிகாவின் மக்கள்கூட்டணி சார்பில் அவர் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.

ரணதுங்கா நேற்று (செவ்வாய்க்கிழமை) சந்திரிகாவை சந்தித்து பேசிய போது இது குறித்து விவாதிக்கப்பட்டதாகக்கூறப்படுகிறது.

ரணதுங்கா தேர்தலில் போட்டியிட்டால் அவருக்கு ஆதரவாக அவரது உற்ற தோழரான இந்திய கிரிக்கெட்அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனும் , வேறு 2 கிரிக்கெட் வீரர்களும் கொழும்பு சென்று பிரச்சனைசெய்யவுள்ளனர்.

ரணதுங்காவின் தந்தை ரெகிரணதுங்கா சந்திரிகா அமைச்சரவையில் மூத்த அமைச்சராக பதவி வகிக்கிறார்.ரணதுங்காவின் சகோதரர் பிரசன்னா இலங்கை மேற்கு மாநிலத்தில் அமைச்சராக பதவி வகித்து வருகிறார் என்பதுகுறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட்டில் வெற்றிகளை குவித்த ரணதுங்கா தேர்தலில் வெற்றி பெறுவாரா?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+