For Daily Alerts
Just In
புயல்: சென்னையிலிருந்து செல்லும் 4 ரயில்கள் ரத்து
சென்னை:
ஆந்திர மாநிலத்தில் புயல் வீசியதன் காரணமாக சென்னையிலிருந்து வட மாநிலங்களுக்குச் செல்லும் பல ரயில்கள்ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஆந்திர மாநிலத்தில் புயல் வீசி கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் ரயில் தண்டவாளங்கள் அரித்துச்செல்லப்பட்டுள்ளன.
இதையடுத்து சென்னையிலிருந்து செல்லும் ஐதரபாத் சார்மினார் எக்ஸ்பிரஸ், ஜி.டி.எக்ஸ்பிரஸ், தமிழ்நாடுஎக்ஸ்பிரஸ், ஹவுரா எக்ஸ்பிரஸ் போன்ற ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மும்பை செல்லும் ரயில்கள் மட்டுமே தற்போது மாற்றுப் பாதையில் சென்று வருகின்றன. அந்த ரயில்கள்ஜோலார்பேட்டை, தர்மாவரம் வழியாக சென்று கொண்டுள்ளன.
இதனால் வடக்கு நோக்கி செல்லும் ரயில் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ரயில் பாதைகள் சரியானபிறகே ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்கள் செல்லும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
Comments
Story first published: Wednesday, October 17, 2001, 5:30 [IST]