ஏர்வாடி மன நலம் குன்றியவர்களுக்கு சிகிச்சை... பார்வையிட்டார் நீதிபதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஏர்வாடி மன நல காப்பகத்திலிருந்து விடுவிக்கப்பட்டு சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் மன நலம் குன்றிய நோயாளிகளை நீதிபதி ராமதாஸ் சென்று பார்வையிட்டார்.

ஏர்வாடியில் தனியார் மன நல காப்பகத்தில் மன நலம் குன்றிய பலர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அங்கு ஏற்பட்ட தீவிபத்தில் மன நலம் குன்றிய 25 பேர் உடல் கருகி இறந்து போனார்கள்.

இதையடுத்து ஏர்வாடியில் செயல்பட்டு வந்த தனியார் மன நல காப்பகங்களை மூடுமாறு தமிழக அரசுஉத்தரவிட்டது. அங்கு இருந்த பலரும் தமிழகத்திலுள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கும் சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர்.

சென்னை, கீழ்பாக்கம் மருத்துவமனையில் மன நலம் பாதிக்கப்பட்ட பல பெண்களும், ஆண்களும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

மன நல காப்பகங்களின் செயல்பாடு குறித்தும், மன நோயாளிகளின் நிலை குறித்தும் ஆராய்வதற்காக நீதிபதி என்.ராமதாஸ்தலைமையில் கமிஷன் ஒன்று அமைக்கப்பட்டது.
இந்த கமிஷன் சென்னை புரசைவாக்கத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த கமிஷனின் தலைவர் நீதிபதி ராமதாஸ்இன்று (வியாழக்கிழமை) கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு சென்று ஏர்வாடியிலிருந்து இங்கு கொண்டு வரப்பட்டமன நோயாளிகளுக்கு எந்த விதமான சிகிச்சை அளிக்கப்படுகிறது, அவர்கள் உடல் நிலை எவ்வாறு உள்ளதுஎன்பதை நீதிபதி ராமதாஸ் நேரில் சென்று பார்த்தார்.

அவர் மருத்துவர்களிடமும் மன நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து விசாரித்துஅறிந்தார்.

நீதபதி ராமதாஸ் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சையை மேற்பார்வையிட்ட போது மன நல மருத்துவர்சிவசிதம்பரமும் உடனிருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+